அதிர்ச்சி!! மூதாட்டியை எரித்துக் கொலை செய்த கொடூரம்!!

 
மூதாட்டி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆண்டிக்குழி கிராமத்தில் வசித்து வருபவர்  சிதம்பரம். இவரது மனைவி 75 வயது  அஞ்சலை.  இவர்களுக்கு 3 மகன்கள் . இவருடைய கணவர் சிதம்பரம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு  அஞ்சலை மட்டும் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது 2வது மகனான ஆறுமுகம் என்பவருடைய மகன் பிரேம்குமார் நேற்று காலை தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார்.

 தீ வைத்து கொலை

அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில், உள்ளே இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது.   அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினரை துணைக்கு அழைத்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு அஞ்சலை ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடல் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது.  

 போலீஸ்

தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு மூதாட்டியை கொலை செய்து உடலுக்கு தீ வைத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் மூதாட்டியின் உடலுக்கு தீவைத்த  மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web