அதிர்ச்சி!! “தி கேரளா ஸ்டோரி ” பட நடிகை கார் விபத்து!! மருத்துவமனையில் அனுமதி!!
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மாநிலங்களில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பல விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ஆதா சர்மா சாலை விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் இயக்குனர் சுதிப்தோ சென்னும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி கேரளா ஸ்டோரியின் குழு கரீம்நகரில் இந்து ஏக்தா யாத்ராவில் சேர இருந்தது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதா 'நன்றாக' இருப்பதாகவும், அவருக்கு பெரிய காயம் எதுவுமில்லை எனவும் தெரிவித்தார்.
Thank u so much for ur concerns about our health. We are overwhelmed with ur calls & warm messages. Just wanted to tell u - we r now absolutely fine. Tom we'll resume our promotional events. Pls continue supporting us. Love & light @adah_sharma @Aashin_A_Shah #TheKeralaStory pic.twitter.com/YYhopxA2Zr
— Sudipto SEN (@sudiptoSENtlm) May 14, 2023
இந்த விபத்து குறித்து ஆதா வெளியிட்ட ட்வீட் பதிவில் "நான் நன்றாக இருக்கிறேன் நண்பர்களே. எங்கள் விபத்து பற்றிய செய்திகளால் நிறைய செய்திகள் வருகின்றன. நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம், சீரியஸாக எதுவும் இல்லை, யாருக்கும் பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை . உங்கள் அன்புக்கும் , அக்கறைக்கு நன்றி." என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் சுதீப்டோ இது குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'மருத்துவ அவசரநிலை' காரணமாக நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். "எங்கள் உடல்நலம் பற்றிய கவலைகளுக்கு மிக்க நன்றி. இப்போது முற்றிலும் நலமாக இருக்கிறோம்.விரைவில் எங்கள் விளம்பர நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவோம். எங்களைத் தொடர்ந்து ஆதரியுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
I'm fine guys . Getting a lot of messages because of the news circulating about our accident. The whole team ,all of us are fine, nothing serious , nothing major but thank you for the concern ❤️❤️
— Adah Sharma (@adah_sharma) May 14, 2023
கேரளா ஸ்டோரி படம் வெளியான பிறகு, அதா ஷர்மாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இந்தப் படம் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரிவினரிடமிருந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது, மேற்குவங்களாத்தில் வன்முறை மற்றும் கலவரங்களை காட்டி முதல்வர் மம்தா பானர்ஜி இந்தப் படத்திற்கு தடை விதித்துள்ளார். அனைத்து சர்ச்சைகளையும் தாண்டி இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கேரள நடிகை “ இந்த படத்தை பாக்ஸ் ஆபிசில் இடம் பிடிக்க செய்து ப்ளாக் பஸ்டராக மாற்றியதற்கு மிக்க நன்றி. "எனது நேர்மையை கேலி செய்தல், எனது நேர்மையை கேலி செய்தல், அச்சுறுத்தல்கள், எங்கள் டீசருக்கும் தடை விதிக்கப்பட்டது, சில மாநிலங்களில் திரைப்படமே தடை செய்யப்பட்டது, ஆனால் உங்களால் தான் திரைப்படம் வெற்றி பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!