அதிர்ச்சி!! பாம்பை உயிருடன் கடித்து துப்பிய இளைஞர்கள்!!

 
சூர்யா

இன்றைய இளைஞர்கள் ட்ரெண்டிங் ஆக்கவும், சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடவும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என அலட்சிய போக்குடன் நினைத்து வருகின்றனர். விபரீத பைக் சவாரி, சாப்பாட்டில் தொடங்கி சாவு வீடு வரை எதையும் விட்டு வைப்பதில்லை. வீட்டில் பெரியவர்கள் அறிவுரை கூறினாலும் எடுத்துக்கொள்வதில்லை. இளைய சமுதாயம் என்னாகுமோ, எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ  என்ற பெருங்கவலை இன்றைய பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

சூர்யா

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர்கள் 33 வயது மோகன், 21 வயது  சூர்யா, 21 வயது சந்தோஷ். மூவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிவது வழக்கம். இவர்கள்  மூவரும் மார்ச்15ம் தேதி   குடியிருப்பு பகுதியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பக்கமாக தண்ணீர் பாம்பு வந்ததை விளையாட்டாக கையில் பிடித்தனர். அதோடு நிற்காமல் பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
வீடியோ பெரும் வைரலான நிலையில், சென்னை வனத்துறையின் பார்வைக்கும் இந்த வீடியோ சென்றது.  

சூர்யா

இதனையடுத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆற்காடு வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலீசார், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உட்பட  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இனியாவது திருந்துவார்களா?

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web