அதிர்ச்சி.. 15 வயசு சிறுமியின் உடல் உறுப்புக்கள் திருட்டு! பெற்றோர்கள் பகீர் குற்றச்சாட்டு!

 
மருத்துவமனை

தங்களது  மகளின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக டெல்லியைச் சேர்ந்த 15  வயது சிறுமியின் பெற்றோர்கள்  குற்றச்சாட்டைக் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், இந்து ராவ் மருத்துவமனையில் கடந்த மாதம் 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி மருத்தவர்கள் அந்த சிறுமிக்கு குடல் அழற்சி அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 26ம் தேதி சிறுமி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தங்களது மகளின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் செய்தனர். இறுதிச் சடங்கு செய்யும் போது சிறுமியின் வயிற்றில் வெட்டு விழுந்ததை உறவினர்கள் கண்டு பிடித்தனர். சில உறுப்புகள் அகற்றப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் தையல் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Surgery

இதையடுத்து இது குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் டெல்லி போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவ வாரியத்தை அமைக்குமாறு டெல்லி அரசை போலீசார் கேட்டுக் கொண்டனர். தற்போது சிறுமியின் உடல் தேஜ் பகதூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால், சிறுமியின் பெற்றோரின் குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். 

Delhi Police

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) (வடக்கு) சாகர் சிங் கல்சி கூறுகையில், மருத்துவமனையில் இருந்து உடலை எடுத்துச் சென்றபோது சிறுமியின் பெற்றோரிடமிருந்து புகார் எதுவும் இல்லை. உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற பிறகு, சிறுமியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இறுதிச் சடங்கிற்கு தயாராகும் போது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதாக அவர் விளக்கினார். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web