அதிர்ச்சி... 22 கிலோ கஞ்சா பறிமுதல்... சிறுவன் உட்பட 3பேர் கைது!

 
கஞ்சா

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மீகா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

கஞ்சா கடத்தல்

விசாரணையில், அவர்கள் கயத்தாறு அருகே பணிக்கர்குளத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி மகன் இசக்கிமுத்து (21), திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் நடுத் தெருவை சேர்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22), தூத்துக்குடி மீளவிட்டானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் அவர்களிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web