அதிர்ச்சி... சாலையோரம் அறுத்து விழுந்த மின்கம்பி... துடிதுடித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

 
தியாக மூர்த்தி

சாலையோரம் உயர் அழுத்த மின் கம்பி அறுத்து விழுந்திருந்த நிலையில், அந்த பகுதியில் சென்றுக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  வெங்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தியாக மூர்த்தி(20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் 2 ம் ஆண்டு பி.எஸ்.சி., ஐ.டி. படித்து வந்தார். 

ஈரோடு

இந்நிலையில் காரமடை தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லுாரிக்கு விடுமுறை என்பதால் பரிசாபாளையத்தில் வசித்து வரும் தனது நண்பரான லோகித் என்பவரைப் பார்க்க தியாக மூர்த்தி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் இருவரும் சென்ற நிலையில் வண்டியை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த தியாக மூர்த்தியின் கையில் மின் கம்பி பட்டதில் உடனடியாக பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். 

ஆம்புலன்ஸ்

உடனடியாக லோகித், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தியாக மூர்த்தியை புன்செய் புளியம்பட்டி  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தியாக மூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web