அதிகாலையில் அதிர்ச்சி... தலைகீழாக கவிழ்ந்த சுற்றுலா பேருந்து... துடிதுடித்த பலியான 2 பேர்! 40 பேர் படுகாயம்!

 
விபத்து

இன்று அதிகாலை கேரளாவில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்றில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே வந்த போது சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

Accident

விபத்து நேர்ந்ததும் பதறியடித்து ஓடிச் சென்ற அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 40 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Orathanadu PS

போலீசாரின் விசாரணையில், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல, பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்க்க கேரளாவில் இருந்து ஆம்னி பேருந்தில் பயணிகள் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலையில் வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே சாலை ஓரத்தில் வேகத்தில் சரிந்து விழுந்துள்ளது. பேருந்தை தாறுமாறாக இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், நடத்துனர் படுகாயம் அடைந்து உள்ளனர். இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web