திமுகவில் அடுத்தடுத்து அதிர்ச்சி... முக்கிய மாவட்ட தலைவர் நாதகவில் ஐக்கியம்!

 
திமுகவில் அடுத்தடுத்து அதிர்ச்சி... முக்கிய மாவட்ட தலைவர் நாதகவில்  ஐக்கியம்!  

தமிழகத்தில்  2026  சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக  தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் மாற்றுக் கட்சியினரை கட்சியில் இணைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளை இணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சமீபகாலமாக புதிய கட்சிகள் கட்சியில் இணைவது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி, பிற கட்சி இணைவது போன்ற நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

தடுமாறும் திமுக... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா? ஆட்சிக்கு வந்ததில் இருந்து 33.5% அதிகரித்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!

அதன்படி கட்சிகள் தேர்தலை கணக்கில் கொண்டு புதிய நிர்வாகிகளை மாற்றம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  2026ம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திமுக தான் சங்கி: மேடையில் செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்!!

அதாவது கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக வணிகர் பிரிவு மாவட்ட தலைவர் சார்புதீன். இவர் திமுகவிலிருந்து விலகிவிட்ட நிலையில்  சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளார்.  தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய தலைவர் ஒருவர் திமுகவிலிருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது