சேலத்தில் அதிர்ச்சி... 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் கைது!

7 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி (50) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் புகார் கூறியுள்ள நிலையில், அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் தலைமையாசிரியர் அளித்த புகாரின் கீழ், நேற்று கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சேலம் போலீசார், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!