திருச்சியில் அதிர்ச்சி... மகன் அடித்ததில் தந்தை மரணம்!

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் ( 45) இவர் சமயபுரம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ராஜ் ( 19) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சோமசுந்தரம் குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு சென்று, வீட்டிலிருந்த மோகன்ராஜ் உள்ளிட்டவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனை மோகன்ராஜ் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் வீட்டிலிருந்த மரக்கட்டையை எடுத்து சோமசுந்தரத்தை தலையில் அடித்திருக்கிறார். அப்போது சோமசுந்தரம் அதே இடத்தில் மயங்கி சரிந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் சோமசுந்தரத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோமசுந்தரம் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, மோகன்ராஜை கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!