அதிர்ச்சி... இஸ்ரேல் எல்லையில் இந்தியர் சுட்டுக்கொலை!

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு கரையில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜோர்டான்- இஸ்ரேல் எல்லை பகுதி மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் இஸ்ரேலிய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்ததாக இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானிய வீரர்களால் இஸ்ரேல் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் குறித்த அடையாளங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தியாவில் கேரள மாநிலத்தில் தும்பா மாவட்டத்தில் வசித்து வந்த 47 வயது கேப்ரியல் பெரேரா. இவர் 2025 பிப்ரவரி 10ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் செய்துள்ளது. உயிரிழந்தவரின் உடலை கேரளாவிற்கு கொண்டுவரும் பணியில் ஜோர்டானிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுட்டுக்கொலை செய்யப்பட்ட இந்தியரான பெரேரா ஜோடானுக்கு விசிட்டர் விசாவில் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்தபோது தான் ஜோர்டானிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உறவினர் எடிசனும் சேர்ந்து செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் எடிசன் உயிர் தப்பியுள்ளார். படுகாயங்களுடன் உயிர் தப்பியவர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எல்லையில் பதற்றமான சூழ்நிலை காரணமாகத் தான் இத்தகைய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!