அதிர்ச்சி...தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை!

 
ரயில் தண்டவாளம்
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே ரயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சூரிய நாராயணன் (20). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை சற்று பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர். நேற்று மாலை தனது தந்தையிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.

தண்டவாளம்

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் மணியாச்சி ரயில் நிலையம் அருகில் கல்லத்திக்கிணறு செல்லும் ரோட்டில் அருகில் உள்ள தண்டவாளப்பாதையில் கன்னியாகுமரி - நிசாமுதீன் ரயில் வந்தபோது தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டார்  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பள்ளி மானவி தற்கொலை

மேலும்  சூரிய நாராயணன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட சூரிய நாராயணன் ஏற்கனவே கடந்த வருடம் விஷம் குடித்தும், கடந்த பிப்ரவரி மாதம் 29 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும்  தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது விசாரணையில்  தெரியவந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web