அதிர்ச்சி... பெண்களைப் போல சேலை அணிந்து 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி!

கடந்த மார்ச் மாதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த குறை தீர்க்கும் மையங்களில், சில பஞ்சாயத்துகளில் ஊதியத்தில் மோசடி அரங்கேறி வருவதாக பலரும் புகைப்பட ஆதாரங்களை அதிகாரிகளிடம் அளித்திருந்தனர். அந்த புகைப்படங்களைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், ஏரியில் வேலை செய்யும்போது பெண்களை போல சில ஆண்கள் சேலை அணிந்து தலையில் முக்காடு போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை 100 வேலை திட்டத்துக்கான NMMS எனப்படும் தேசிய மொபைல் கண்காணிப்பு சேவையில் பதிவேற்றம் செய்து, ஊதியம் பெற்று வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இப்படி சுமார் ரூ.3 லட்சம் வரை மோசடி செய்தது அம்பலமான நிலையில் இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!