அதிர்ச்சி... தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி!

 
கொரோனா உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மக்களே...  மீண்டும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டுமே 186 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் இந்த எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், தினந்தோறும் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகாரித்து வருகிறது.

corona

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்திபன் (55) என்பவர் காலமானார். இவர் ஏற்கெனவே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

Corona

கடந்த மாதம் திருச்சியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களிடையேயும் இது குறித்த விழிப்புணர்வு அவசியம். கூட்டமான இடங்களுக்கு செல்கையில் தவறாமல் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து வாருங்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web