அதிர்ச்சி... பயிற்சியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!
ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பட்டாலியனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் காவலர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் ஆவடி 5-வது பட்டாலியன் படையில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று டிசம்பர் 5ம் தேதி காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காவலர் சந்தோஷுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பயிற்சியின்போது இளம் காவலர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தது தொடர்பாகத் திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
