அதிர்ச்சி... தபால்களை தீ வைத்து எரித்த அஞ்சலக ஊழியர்!

 
தபால்
 


தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் தபால்களை குப்பையில் வீசி தீவைத்து எரித்ததாக தற்காலிக அஞ்சலக பணியாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தபால்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே தபால்கள் குப்பையில் வீசி தீயிட்டு எரிந்த நிலையில் இருப்பதை அறிந்த கழுகுமலை துணை அஞ்சல் அதிகாரி பால்ராஜப்பா இம்மாதம் 2ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் மற்றும் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

தொடர்ந்து துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில், அஞ்சலகத்தில் தற்காலிக அஞ்சலக பணியாளராக பணியாற்றி வரும் முத்தையன் சேர்வை தெருவை சேர்ந்த மா. பாலசுப்பிரமணியன், தபால்களை குப்பை கிடங்கில் வீசியதும், தீயிட்டு எரித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து துணை அஞ்சலக அதிகாரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை நேற்று கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web