அதிர்ச்சி... குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
Apr 26, 2025, 20:15 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் செபஸ்டின். இவரது மனைவி ஜெமினி கிமிலா (29). இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் ஜெமினி கிமிலா குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 22-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web