அதிர்ச்சி... மின்னல் வேகத்தில் விபரீதம்... விளையாட்டு அரங்கில் துப்பாக்கிச் சூடு... 11 பேர் பலியான சோகம்!

 
அமெரிக்கா துப்பாக்கி

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது. திடீரென பில்லியர்ட்ஸ் விளையாட்டு அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் விளையாடிக் கொண்டிருந்தவர்களைச் சுட்டதில் பரிதாபமாக 11 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸினில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அங்குள்ள மக்களை பெரும் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் பில்லியர்ட் விளையாட்டு அரங்கு ஒன்றில் அலுவலகம் முடித்து விட்டு வீடு திரும்புகையில் சிலர் இரவு நேரத்தில் பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அரங்கிற்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சராமாரியாக அங்கிருந்தவர்களை சோக்கி சுடத் துவங்கினார். 

துப்பாக்கி

இதில், விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கி சூடு பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதே வேளை துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Police

இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அதிபர் ஐரிஷ் ஜியோமாரா கெஸ்ட்ரோ செமியிண்டொ உத்தவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web