அதிர்ச்சி... மத்திய அமைச்சர் மகளுக்கு பாலியல் தொல்லை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது, “என்னுடைய மகளுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண பெண்களின் நிலை என்னவாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பல பெண்கள் புகார் கொடுக்க தயங்குகிறார்கள். இதனால் நாமும் அமைதியாக இருக்கக் கூடாது என்பதால் தான் தற்போது நான் புகார் கொடுக்க வந்துள்ளேன்” என்றார்.
“தனது நண்பர்களுடன் என்னுடைய மகள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அங்கிருந்த சில நபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்” என்றார்.
மத்திய அமைச்சரின் இந்தபுகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய மந்திரியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!