அதிர்ச்சி... பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே பாம்பு கடித்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி சிலுவை புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி ஜெயராணி (62), சாயர்புரம் சாலை சந்திப்பு ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது வலது காலில் ஒரு பாம்பு கடித்தது.
உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 5 மணி அளவில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!