அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்திய 4 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கி உதவியுடன் இரத்தம் செலுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 4 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. (HIV) தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகள், வாழ்நாள் முழுவதும் சிகிச்சையின் ஒரு பகுதியாகப் பலமுறை இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். சுமார் 4 மாதங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்திருந்தாலும், இந்தத் தகவல் சமீபத்தில் தான் வெளிவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ரத்த வங்கி வழங்கிய இரத்தம் மூலமாகத்தான் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று குழந்தைகளின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தேசிய வழிகாட்டு விதிகளின்படி, எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் பிற பாதிப்புகள் உள்ளனவா என்று பரிசோதனை செய்த பின்னரே இரத்தம் சேகரிக்கப்பட்டுச் செலுத்தப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் சத்னா தவிர்த்துப் பிற மாவட்டங்களில் இருந்தும் கூட இரத்தம் பெறப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் சுமார் 70,000 எச்.ஐ.வி. நோயாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
