பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!! லோடு வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட இளம்பெண்!!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பர்வீன் பேகம் என்ற என்ற 38 வயது பெண் தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். பர்வீன் தனது மகளுடன் சாலையின் இடதுபுறம் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர்களுடன் இன்னொரு பெண்ணும் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அந்த பக்கமாக அதிகவேகத்தில் வந்த டிராலி ஆட்டோ அந்த பெண் மோது பயங்கரமாக மோதியது. இந்த கோரவிபத்தில் தாய் மற்றும் மகள் கண் முன்னே அந்த பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.
பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்த தாயை அடித்து தூக்கிய டாடா ஏஸ்!! #Telangana #accident #CCTVFootage pic.twitter.com/tVcmeuzcxW
— A1 (@Rukmang30340218) March 28, 2023
அருகில் இருந்த தாய் மற்றும் மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொஞ்சம் இருந்தாலும் அவர்களுக்கு விபத்து நடந்திருக்கும்.இந்த விபத்து குறித்து பாலாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநரின் தவறுதான் என அடிப்படையில் முடிவு செய்தனர்.
அந்த பெண் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது.. அதிவேகமாக வந்த ஆட்டோ பெண் மீது மோதி தூக்கி வீசப்பட்டு வெகுதூரம் விழுந்தது. இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநரின் தவறு என்பதை போலீசார் அடிப்படையில் உறுதி செய்தனர். எனினும் விபத்து நடந்த போது டிரைவர் மது அருந்தினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது ஆட்டோ பிரேக் பழுதாகி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!