பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் ... ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ் தனியார் பள்ளி மைதானத்தில் கோடை விடுமுறை மற்றும் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி 77வது பொருட்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் ... ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்! pic.twitter.com/DGZiWQQVtF
— Dina Maalai (@DinaMaalai) April 12, 2025
இந்தப் பொருட்காட்சியை காண வந்த விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களது குழந்தைகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்ததில் அப்பெண்ணிற்கு படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக தகவல் அறிந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!