அதிர்ச்சி சிசிடிவி வீடியோ... ஹோலியில் கலர் பூச மறுத்த மாணவர்... 3 பேர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்!
ஹோலி பண்டிகையின் போது ராஜஸ்தான் மாநிலம், டௌசா மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கலர் பூசிக் கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரத்தில் 3 பேர் சேர்ந்து, இளைஞரின் கழுத்தை பெல்டால் நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
दौसा जिले के लालसोट में लाइब्रेरी में पढ़ रहे हंसराज मीणा नामक छात्र की निर्मम हत्या सिर्फ़ इसलिए कर दी गई क्योंकि उसने गुलाल लगाने से मना कर दिया था। यह भजनलाल सरकार की कानून-व्यवस्था की नाकामी को दर्शाता है। हम प्रशासन से दोषियों पर सख्त कार्रवाई की मांग करते हैं! pic.twitter.com/5HJZWbWrFC
— Hansraj Meena (@HansrajMeena) March 13, 2025
ரால்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில், ஹன்ஸ்ராஜ் என்பவர் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, அசோக், பப்லு, கலுராம் என்ற 3 பேர் நூலகத்திற்குள் நுழைந்து, ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஹன்ஸ்ராஜுக்கு வண்ணம் பூச முயற்சித்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது தகராறாக முற்றியது. இதனைத் தொடர்ந்து நூலகத்திற்குள் வைத்தே அவர்கள் 3 பேரும் பெல்ட்டை பயன்படுத்தி அந்த இளைஞரை கழுத்தை நிறுத்தி கொலை செய்தனர். இதில் ஹன்ஸ்ராஜ் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்நிலையில் இது குறித்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
