அதிர்ச்சி... மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மாடியில் இருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் அனுப்பிரியா (19). கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் கோவிந்தராஜ் காலமான நிலையில், அனுப்பிரியா, கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செயல்பட்டு வரும் பாரா மெடிக்கல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்குச் சென்று வந்த அனுப்பிரியா, நேற்று முன்தினம் இரவு கல்லூரி மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பீளமேடு போலீசார் அனுப்பிரியாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணம் மாயமானது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரித்ததால் மனமுடைந்து கல்லூரி மாணவி அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், சக மாணவ, மாணவிகள் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!