அதிர்ச்சி.. சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை.. மற்றொரு மாணவர் கவலைக்கிடம்!

 
!!

சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீவன் சன்னி, விடுதியில் தங்கி முதுநிலை ஆராய்ச்சி 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். மாணவர் ஸ்ரீவன் சன்னி படிப்பில் சிறந்து விளங்கியவராக இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை 4 மணி அளவில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

!!

இது குறித்து தகவல் அறிந்துசென்ற போலீசார், 6 மணி அளவில் அவரின் உடல், உடற்கூராய்வுக்காக எடுத்துச் சென்றனர். மாணவர் ஸ்ரீவன் சன்னியின் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  மன உளைச்சலுடன் அவர் இருந்ததே தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

அதேபோல மற்றொரு மாணவரும் தற்கொலை முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் சர்சையாகி உள்ளது. 

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

இது குறித்து தீவிர விசாரணை நடத்தி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web