அதிர்ச்சி வீடியோ.. அண்ணி மீது கொடூர தாக்குதல்.. மது போதையில் கொழுந்தன் வெறிச்செயல்!

 
 சச்சின் காஷ்யப்

உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராதாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சச்சின் காஷ்யப். கடந்த 17 ஆம் தேதி குடிபோதையில் தனது சகோதரரின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, ​​அவரது அண்ணி வீட்டில் தனியாக இருந்ததால், பொருட்களை எல்லாம் எடுத்து வீசி எறிந்தார். இதைப் பார்த்து அண்ணி தட்டி கேட்கையில், அவர் கோபமடைந்து அண்ணியை கடுமையாக தாக்கினார்.


அவர்களின் சத்தம் கேட்டு, சச்சினின் தாய் உடனடியாக அறையிலிருந்து வெளியே வந்து இருவரையும் தடுத்தார். இதையடுத்து, ஒரு சிறுவன் அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றான். அவர் சென்ற பிறகு, சச்சினின் தாய் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அவர்கள் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web