வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... ரயிலில் இரு பெண்கள் குடுமிப்பிடி சண்டை அடிதடி... ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய கொடூரம்!
மும்பையில் உள்ளூர் ரயிலில் 2 பெண்களுக்கு இடையே உருவான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ரயில்வே புறநகர் ரயிலில் இரண்டு பெண்களுக்கு இடையே நடக்கும் வன்முறை வாக்குவாதத்தைக் காட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது. பெண்கள் சிறப்பு உள்ளூர் ரயிலின் கதவு அருகே நடந்த இந்த சண்டையில், ஒரு பெண்ணின் தலைமுடி பலமாக இழுக்கப்பட்டதால் தலையில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது.
#WATCH | A violent altercation occurred between two women on the Churchgate - Virar ladies special train, with one woman depicted blee*ing from her forehead. An official report regarding the incident has not been submitted yet.#mumbailocal #virar #mumbainews #Mumbai pic.twitter.com/trp3KqG2Bc
— Free Press Journal (@fpjindia) June 20, 2025
இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இரண்டு நிமிட காணொளியில், சக பயணிகள் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு, மிரட்டல்களையும், துஷ்பிரயோகங்களையும் செய்வதைக் காட்டுகிறது. சக பயணிகள் தலையிட முயன்றபோது, குழப்பத்திற்கு மத்தியில் ஒரு பெண் ரயிலின் கதவை மூட முயற்சிப்பதைக் காணலாம். சண்டையின் போது யாராவது விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சி, ஒரு பெண் ரயிலின் கதவை மூட முயற்சிக்கிறார். இந்நிகழ்வு ஜூன் 17 ம் தேதி இரவு 7:32 மணிக்கு பயந்தர் நிலையத்தை அடைந்த பெண்கள் சிறப்பு ரயிலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் .

பெண்களுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் கூட, ரயில் ஓடிக்கொண்டிருந்தபோது திறந்திருந்த வாசலுக்கு அவர்கள் எவ்வளவு அருகில் இருந்தார்கள் என்பது குறித்து அந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
