அதிர்ச்சி வீடியோ... ரயிலில் அளவு குறைவான உணவு... தட்டிக்கேட்ட பயணி மீது தாக்குதல் நடத்திய ரயில்வே ஊழியர்கள்!

மத்திய ரயில்வேயில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஹவுரா–மும்பை கிதாஞ்ஜலி எக்ஸ்பிரஸில் ஏப்ரல் 6ம் தேதி சமூக சேவகர் சத்யஜித் புர்மன் பயணம் செய்தார். இவர், ரயில்வே உணவக ஊழியர்கள் குறைவான உணவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
"हम शिकायत करने गए, उन्होंने हमें धमकाया"
— News24 (@news24tvchannel) April 11, 2025
◆ गीतांजलि एक्सप्रेस में सामाजिक कार्यकर्ता को स्टाफ ने बनाया बंधक, वीडियो वायरल
◆ सत्यजीत बर्मन ने IRCTC के 7 कर्मचारियों पर दर्ज कराया केस #ViralStory #IRCTC #IndiaNews pic.twitter.com/GAXOaPdKDn
இச்சம்பவம் அம்ராவதி அருகே உள்ள பத்னேரா பகுதியில் நடந்திருப்பதாக இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சத்யஜித் புர்மன், வேறு சில பயணிகளுடன் உணவு பாக்கெட்டுகளின் எடையை பரிசோதிக்க கேன்டீனுக்குள் சென்றுள்ளார்.
அப்போது, IRCTC ஊழியர்கள் அவரை “பயணிகளை தூண்டி விட்டார்” என குற்றம்சாட்டி, அவருடைய மொபைலை பறித்து தாக்குதல் நடத்தினர். இதே நேரத்தில், மற்ற பயணிகளும் மிரட்டப்பட்டதாகவும், சிலர் தங்களையும் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தப்பித்த ஒரு பயணி RPF ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைத்ததன் மூலம் போலீசார் வந்து சத்யஜித் புர்மனை மீட்டனர். அடுத்த நாள், ஏப்ரல் 7ம் தேதி, கள்யான் ரயில்வே நிலையத்தில் உள்ள GRP மையத்தில் சத்யஜித் புர்மன் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் IRCTC ஊழியர்களின் பதட்டமான நடத்தையை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாக ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவை தரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!