இன்று கடையடைப்பு.... கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தும் வணிகர்கள் சங்கம்... !
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக நேற்று காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தொடர்ந்து வந்து நீண்ட வரிசையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம் பகுதிகளில் இன்று கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!