ஊட்டியில் இ-பாஸ் முறையை எதிர்த்து கடையடைப்பு.. அம்மா உணவகத்தால் பசியாறும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, ஊட்டியில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.குடும்பத்தோடு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், அருகில் இருந்த அம்மா உணவகத்தில் பசியாறினார்கள்.
கடையடைப்புப் போராட்டம் காரணமாக உதகையில் பெரும்பாலான தனியார் உணவகங்கள் மூடப்பட்டதால், உணவு தேடிய சுற்றுலாப் பயணிகள் அருகில் இருந்த அம்மா உணவகங்களில் தஞ்சமடைந்தனர்.
சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் இயங்காததால் உதகையே வெறிச்சோடியது. சொந்த வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகளும் வாடகைக்கு வாகனத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில் வார நாள்களில் பொதுவாக 6,000சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
கேரளத்தில் விடுமுறை என்பதாலும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை வழக்கமாகவே காணப்பட்டது. இந்த நிலையில்தான் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரியும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் வணிகா் சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 12 சோதனைச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் இ-பாஸ் வழங்க க்யூஆா் கோட் பதிவு செய்யப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்து நீலகிரிக்கு செல்லலாம். மேலும், ஆன்லைன் மூலமும் இ- பாஸை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!