தீராத அதிர்ச்சி.. எலும்பை பவுடராக்கி அப்புறப்படுத்திய காதலன்.. திடுக்கிடும் தகவல்கள்!

 
ஷ்ரத்தா

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் ஆஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக டெல்லியில் சோ்ந்து வாழ்ந்தனா். நாளடைவில்  அஃப்தாப் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த ஷிரத்தா தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனிடையே, மகளின் டெல்லி வீட்டை அவரது தந்தை கண்டுபிடித்தபோது, அவர் அங்கு இல்லை. எனவே மகளை காணவில்லை என தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில் தான் ஷிரத்தாவை அஃப்தப் கொலை செய்தது தெரியவந்தது. 

ஷ்ரத்தா

கருத்து வேறுபாடு காரணமாக ஷ்ரத்தா வாக்கரை ஆஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டினாா். அதன் பின்னா் உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசினாா். கடந்த மே மாதம் அந்தப் பெண் கொல்லப்பட்ட நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகே வெளியுலகுக்குத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ஆஃப்தாபை காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்த சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் புதிய தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் 6,000 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினா் தயாா் செய்துள்ளனா்.

இந்த குற்றப்பத்திரிகை வாயிலாக தெரிய வந்திருக்கும் சில தகவல்கள் என்னவென்றால், அஃப்தாப் கற்களை கூழாக்கும் இயத்திரத்தின் மூலம், ஷ்ரத்தாவின் சில எலும்புப் பகுதிகளை கூழாக்கி (பவுடர் )அகற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.  
அஃப்தாப்புக்கு டெல்லி முதல் துபை வரை ஏராளமான பெண் தோழிகள் இருப்பதாகவும், இதுவும் ஷ்ரத்தா - அஃப்தாப் சண்டைக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

ஷ்ரத்தா

தனது பெண் தோழிகளில் யாராவது வீட்டுக்கு வரும் போது, அஃப்தாப், ஃபிரிட்ஜில் இருந்து ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை வெளியே எடுத்து சமையலறையின் கீழ் அலமாரியில் யாரும் பார்க்க முடியாத வகையில் வைத்துவிடுவார் என்றும், தோழி வெளியே சென்றதும் மீண்டும் எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் வாக்குமூலத்தில் அஃப்தாப் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அஃப்தாப் மே 18 ஆம் தேதி ஷ்ரத்தாவை கொலை செய்த அன்று இரவு ஆன்லைன் மூலம் சிக்கன் ரோல் வாங்கி அமைதியாக சாப்பிட்டு முடித்துள்ளார். சுமாா் 100 சாட்சிகளின் பெயா்கள், குற்றப்பத்திரிகையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், தடயவியல் ஆதாரங்கள், மரபணு பரிசோதனை அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டாலும் கூட, ஷ்ரத்தாவின் மண்டைஓடு இன்னமும் கண்டறியப்படாத நிலையில், கொலை நடந்ததற்கான சாட்சிகள்தான் மிகவும் முக்கியம். அஃப்தாப்பின் வாக்குமூலத்தை மட்டு நீதிமன்றம் எடுத்துக் கொண்டு தீர்ப்பளிக்காது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web