ஷ்ரேயாஸ் அய்யர் மும்பை அணி கேப்டனாக நியமனம்!
33வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில் மும்பை அணி சார்பில் கேப்டனாக ஷர்துல் தாக்கூர் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், பயிற்சியின் போது ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, நடப்பு விஜய் ஹசாரே தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷர்துல் தாக்கூர் விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் மும்பை அணியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
