ரூ.2 கோடி சொத்தையும் அரசு கேன்சர் மருத்துவமனைக்கு எழுதி வைத்த சகோதரிகள்!

 
சுந்தரி பாய்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜ் நகரில் 54 வயதான சுந்தரிபாய் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தனது வீட்டில் இறந்து சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கதினர் ஆவடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுந்தரி பாய் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

சுந்தரி பாய் இறப்பதற்கு முன்பு அதே மாதம் 14ஆம் தேதியில் அவருடைய மூத்த சகோதரி ஜானகியும் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. வீட்டில் தனியாக வசித்து வந்த சகோதரிகள் இருவரும் உயிரிழந்த நிலையில், வீட்டில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது.

சுந்தரி பாய்

அந்த கடிதத்தில், எங்கள் தந்தை மற்றும் தாயார் 2000ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்து விட்டனர். அதன் பிறகு 2013, 2014 என அடுத்தடுத்த ஆண்டுகளில் என் அக்கா, தம்பி இருவரும் புற்றுநோயால் இறந்து விட்டனர். அதன்பிறகு நானும் என் அக்கா ஜானகியும் மட்டும் 10 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்தோம்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அக்கா ஜானகி உடல்நல குறைவால் இறந்து விட்டார். அதன்பிறகு என்னால் தனிமையில் இருக்க முடியவில்லை. எங்களிடம் 90 சவரன் நகை, தபால் அலுவலக வங்கியில் 30 லட்சம் மற்றும் இந்தியன் வங்கிக் கணக்கில் 30 லட்சம் இருக்கிறது. அவை உட்பட நாங்கள் வாழ்ந்து வந்த வீடு உள்ளிட்ட அனைத்தையும் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மையத்திற்கு கொடுக்க வேண்டும், என கடிதம் எழுதியுள்ளது தெரியவந்தது.

இவை அனைத்தையும் கைப்பற்றிய காவல் துறையினர் உயிரிழந்த சுந்தரி பாய்க்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் அவரது சொத்துக்களை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன் பேரில் ஆவடி துணை தாசில்தார் செந்தில் முருகன் மற்றும் வருவாய்துறை அதிகாரியிடம் 54 சவரன் தங்க நகைகள், பணம், வீடு பத்திரம் உள்ளிட்டவை ஆவடி உதவி ஆய்வாளர் பிரேமா தலைமையிலான காவல் துறையினர் ஒப்படைத்த நிலையில், வருவாய்துறை அதிகாரிகள் அவற்றை ஆவடி கருவூலத்தில் பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

சுந்தரி பாய்

புற்றுநோயால் உயிரிழந்த அக்கா, தம்பி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இரண்டாவது அக்கா என அனைவரும் உயிரிழந்த துக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண் ஒருவர், உயிரிழப்பதற்கு முன் குடும்ப சொத்துக்களை புற்றுநோய் மையத்திற்கு கொடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்த சம்பவம் ஆவடியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கடிதத்தில் 90 சவரன் நகை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் 54 சவரன் நகை மட்டுமே கைப்பற்றி உள்ளனர். எஞ்சிய நகைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web