கார் மீது லாரி மோதி 6 பள்ளிக்குழந்தைகள் துடிதுடித்து பலி!

 
லாரி விபத்து

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில்  கார் ஒன்று நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணம் செய்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குழந்தை மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பிவிட்டது.  

விபத்து

இந்நிலையில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து  தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

விபத்து

உயிரிழந்த ஓட்டுனர் மற்றும் குழந்தைகளின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web