அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு.. அதிமுக ஐ.டி.விங் நிர்வாகி கைது!

 
துரைமுருகன்

தமிழக அரசில் நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் உள்ளார். திமுக மூத்த தலைவரான இவர், நடப்பு தமிழக சட்டப்பேரவையில், கடந்த 29ஆம் தேதி உருக்கமாக  பேசினார். அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, தன்னுடைய மரணத்திற்கு பிறகு புதைகுழியில் இங்கே கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறான் என்று எழுதினால் போதும், என்று உருக்கமாக பேசினார். 

துரைமுருகன்

இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் ஒருவித தாக்கத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிலர், அமைச்சர் துரைமுருகனின் புகைப்படத்தை கல்லறையில் உள்ளது போன்றும், அவரது பேச்சை சித்தரித்தும், சில வாசகங்களை குறிப்பிட்டும், அதனுடன் ஆடியோ இணைத்து வீடியோவாக சமூக வலைதளளில் பதிவிட்டனர். 

துரைமுருகன்

இவ்வாறு அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்யக்கோரி திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா புகாரின்படி வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அவதூறு பரப்பியது பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் அருண்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web