கோழிக்கறியில் தூக்க மாத்திரை... கள்ளக்காதலனைக் கதற வைத்த காதலி!

 
க்ரில் சிக்கன்

மொத்தமாக 30 தூக்க மாத்திரைகளைக் கோழிக்கறியில் கலந்துக் கொடுத்து கள்ளக்காதலனை ப்ளாண் பண்ணி தீர்த்துக் கட்ட தகாத உறவு வைத்திருந்த பெண் முயன்றுள்ளது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்  பகுதியைச் சேர்ந்தவர் சிகாமணி. இவருக்குத் திருமணமாகி மனைவி பிரியா, மற்றும் ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 20 வருடங்களாக சிகாமணி, துபாயில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று வைத்து நடத்தி வந்தார். இதன் காரணமாக அவருடைய மனைவி பிரியா, குழந்தைகளுடன் தஞ்சாவூரில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச்  21ம் தேதி துபாயில் இருந்து பிரியாவின் கணவர் சிகாமணி, கோவைக்கு விமானத்தில் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.  இதனால் அவர் தன்னுடைய கணவர் சிகாமணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நிலையில் தொடர்ந்து அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. கோவைக்கு வந்தவர், அதன் பின்னர் இத்தனை நாட்களாக வீட்டிற்கு வராததால், கடந்த ஏப்ரல் 28ம் தேதி பிரியா, தனது கணவரைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பிரியா கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஏப்ரல்  25ம் தேதி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டறியப்பட்டதாகவும் அடையாளம் தெரியாததால் போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்து விட்டதாகவும் தெரிய வந்தது.

கள்ளக்காதல்
இதன் காரணமாக காட்டுப்பகுதியில் இறந்தது சிகாமணியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.  

ஒரு பக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 30ம் தேதி சிகாமணியைக் கொலைச் செய்ததாக கூறி தியாகராஜன் (58) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது துபாயில் சிகாமணி நடத்தி வந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாரதா (32) என்ற பெண் வேலைப் பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

பின்னர் சாரதா சிகாமணிக்கு தொழிலுக்கு பணம் கொடுத்தார். இது தொடர்பாக சிகாமணியின் மனைவிக்கு தெரிய வரவே அவர் சாரதாவை செல்போனில் அழைத்து கண்டித்துள்ளார். இநநிலையில் சாரதா திடீரென சிகாமணியிடம், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ்

இதில் சாரதாவை சிகாமணி அடித்து விட்டார்.  இது குறித்து சாரதா, தன்னுடைய தாய்க்கு நடந்த விஷயங்களை கூறிய நிலையில், அவர் தியாகராஜன் மற்றும் மற்றொருவரை ஏற்பாடு செய்து, துபாயில் இருந்து சிகாமணியை வரவழைத்து கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

சம்பவம் நடந்த நாளில் சாரதா, தியாகராஜன் மற்றும் மற்றொருவர் என மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து கோவை வந்த சிகாமணியும் அங்கு சென்ற நிலையில், அவருக்கும் மது ஊற்றிக் கொடுத்துள்ளனர்.

மதுபோதையில் அவருக்கு சைட்டிஷ்ஷாக கொடுத்த கோழிக்கறியில் கிட்டத்தட்ட 30 தூக்க மாத்திரைகளைக் கலந்துள்ளனர். இதை சாப்பிட்ட சில நிமிடங்களில் சிகாமணி மயங்கி கீழே சரிந்து விடவே, அதன் பின்னர் சாரதா சிகாமணியின் நெஞ்சில் ஏறி நின்று அவரை மிதித்துள்ளார். இதில் சிகாமணி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சாரதா, அவருடைய தாயார் கோமதி, சகோதரி நிலா உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web