சற்றே உயர்ந்த தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையானது.
ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.72,800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு அதிரடியாக ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120க்கும், கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.110000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!