விபத்தில் மருமகன் மரணம்... விஷம் குடித்து மாமனார் தற்கொலை!

 
விஷம்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் விபத்தில் மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் பாண்டியன் (62). பெயின்டர். இவரது மகன்கள் வேல்பாண்டி, முத்துராமலி­ங்கம், மகள் வேணி. வேணியின் கணவர் சின்னத்துரை 6 மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். 

மருமகனை விஷம் வைத்து கொலை செய்த மாமியார்!! பர பர வாக்குமூலம்!!

இதனால் பாண்டியன் மனவருத்தத்தில் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி மதுவில் பூச்சிமருந்தைக் கலந்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது தொடர்பாக ஆறுமுகநேரி உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web