மிக விரைவில் ..!! ஆதார் போல் தமிழகத்தில் “ மக்கள் ஐடி”!! அதிரடி!!
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை அவசியம் . ஆதார் அட்டை இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகளின் பரிவர்த்தனைகளுக்கு மிக அவசியம். மொபைல் எண் வாங்குவது முதல் விமானப் பயணம் வரை ஆதார் அட்டை மிக மிக அவசியம். இதேபோல் தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும் இந்த மக்கள் ஐடி எண் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தரவுகளை கொண்டு மாநில குடும்ப தரவுத்தளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மொபைல் சிம் வாங்குவது தொடங்கி வங்கி பரிவர்த்தனை, விமான பயணம் என அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
இந்திய குடிமக்களுக்கு ஒன்றிய அரசு மூலம் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் இப்போது ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் தனி நபர் அடையாள அட்டையாகும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!