தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் முந்தைய ஆண்டுகளைவிட சற்று குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கமாக மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் நிகோபர் தீவுகளின் சில பகுதிகளில் மே 13ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவது என்பது மழைக்கான சாதகமான சூழலைத்தான் தரும் என தனியார் வெதர்மேன் கூறியுள்ளார்.
அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி கேரளாவில் அந்த நேரத்தில் நல்ல மழையை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவு மழை இருக்காது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான் இந்த பருவமழை இருக்கும். மற்ற இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். அந்தவகையில் நடப்பாண்டில் மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும். வெப்பச்சலனம் காரணமாக கோடை மழைக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால், சராசரியாக வெப்பம் குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!