மே 1, வாரவிடுமுறைக்கு 2,119 சிறப்புப் பேருந்துகள்... முன்பதிவு செய்துட்டீங்களா?

 
அரசு பேருந்து
 


 
தமிழகத்தில் வார மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில்  தென்மாவட்ட மக்களின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் உழைப்பாளா் தினம், முகூா்த்தம், வாரவிடுமுறையையொட்டி 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்  உழைப்பாளா் தினம் (மே 1), முகூா்த்த நாள் (மே 2), வார விடுமுறை (மே 3, 4)   விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் பிற  இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி உட்பட பல  இடங்களுக்கு புதன்கிழமை 565 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

பேருந்து யுபிஐ


இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 100 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 90 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அதே நேரத்தில்  மாதவரத்திலிருந்து புதன்கிழமை (ஏப்ரல் 30) முதல் சனிக்கிழமை (மே 3)வரை 24 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை (மே 4) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 715 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web