அயோத்தியில் இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு பூஜை.. மோடி தொடங்கி வைப்பு... !

 
அயோத்தி

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில்  மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும்  ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.  இதற்கான வரவேற்பு ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில்   பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அமித்ஷா  ,பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், ஆன்மிகவாதிகள்  என  பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

அயோத்தி விமான நிலையம் மோடி
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்நிலையில், இன்று முதல் சிறப்பு பூஜையை பிரதமர்   மோடி தொடங்கி உள்ளார். இது குறித்து பிரதமர் ராமர் கோயில் விழாவில் கலந்து கொள்வது எனது அதிர்ஷ்டம், அதற்காக இன்று முதல் பூஜையை தொடங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து  பிரதமர் மோடி ”  அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு  இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன.  பிரான் பிரதிஷ்டையில்  இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை படைத்துள்ளார்.

அயோத்தி

இதை மனதில் வைத்து, இன்று முதல் 11 நாள் சிறப்பு   பூஜைகளை தொடங்குகிறேன் ”என மோடி  பதிவிட்டுள்ளார்.இது குறித்து பிரதமர்  சிறப்பு வீடியோ மற்றும்  ஆடியோ செய்தியை  வெளியிட்டுள்ளார். அதில், இந்து மத சாஸ்திரங்களின்படி, ஒரு தெய்வ  சிலையின்  பிரான் பிரதிஷ்டைக்கு பல நாட்களுக்கு முன்பே பின்பற்றப்பட வேண்டிய விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரான் பிரதிஷ்டை தினத்திலும்  அதற்கு முன்பிருந்தே  அனைத்து விதிகளும், பரிகாரங்களும்  வேதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.  அதே கண்டிப்புடன் அதனை பின்பற்றுவேன் என பதிவிட்டுள்ளார்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web