கோடை விடுமுறையை கொண்டாடுங்க... தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையொட்டி மக்களின் தேவை வசதிகளின் அடிப்படையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (எண். 06190), சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பகல் 12.30 மணிக்கு வந்து சேருகிறது.
மறுவழித்தடத்தில், பிற்பகல் 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் (எண். 06191), செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம் வழியாக திருச்சியை இரவு 10.40 மணிக்கு சென்றடையும். 2 ஏசி சேர் கார், 6 முன்பதிவில்லா பெட்டிகள் உட்பட 20 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படவுள்ளன. செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!