தாம்பரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

தமிழகத்தில் தலைநகரில் தாம்பரம் - போத்தனூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 8ம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கோடைகால விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு மாதம் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கு மே 9, 16, 23, 30, ஜூன் 6 தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06185) இயக்கப்படும்.மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து தாம்பரத்துக்கு மே 11, 18, 25, ஜூன் 1, 8 தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06186) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!