ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்.. முன்பதிவு தொடக்கம்!

 
ரயில்


 தமிழகத்தில் பள்ளிகளில் ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து கோடைகால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப்ரல் 4ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை மாா்ச் 12ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.  இது குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில்

அதன்படி  திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் ஏப். 27-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.இந்த ரயில் திருச்சியிலிருந்து அதிகாலை 5.35-க்கு புறப்படும் ரயில் (எண் 06190) பிற்பகல் 12.30-க்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06191) இரவு 10.40-க்கு திருச்சி சென்றடையும்.

ரயில்

இந்த ரயிலில் இருக்கை வசதி கொண்ட 2 ஏசி வகுப்புப் பெட்டிகள், 10 சாதாரண பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு   ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web