ஸ்டாலின் தென் மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின், தென் மாநிலங்களின் சார்பில் கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என பேசியிருந்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு “ தென்மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மக்கள் நீதி மய்யம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென் மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என கூறினார். ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு கூட்டமைப்பாக சென்று நாம் வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது, அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!