சாட்டையைச் சுழற்றினார் ஸ்டாலின்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்... பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!

-‘ப்ரீத்தி’ கார்த்திக்

 
திருச்சி ஸ்டாலின்

திருச்சியில், தி.மு.க., எம்.பி., சிவா வீட்டில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கோர்ட் செஷன்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்ற எம்.பி., ஆரதவாளர்களை, அங்கு சென்ற அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்க முயன்றனர். அதை தடுக்க முயன்ற பெண் போலீசார் ஒருவரும் காயமடைந்தார். காலை முதல் பரப்பரப்பாக செய்திகளில் வலம் வந்த இச்செய்தி  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, எம்.பி., தரப்பில் சூர்யா குமாரும், அமைச்சர் தரப்பில் 54வது வட்டச் செயலாளர் மூவேந்தரும் செஷன்ஸ் நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,  நகர பொறியாளர் சிவபாதம்,  மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பவர்கள் வரிசையில், ராஜ்யசபா எம்.பி., சிவாவின் பெயர் இடம் பெறவில்லை. 

நேரு

இதுதவிர, திறப்பு விழா பெயர் பலகையிலும் எம்.பி.,யின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தான் மோதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால்  எம்.பி., சிவாவின் வீட்டின் வழியாக  அந்த நிகழ்ச்சிக்கு சென்ற அமைச்சர் நேரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கருப்புக் கொடி காட்டப்பட, விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், ராஜ்யசபா எம்.பி.,யான சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது காரணமாக சொல்லப்பட்டது. இது சிவா ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கறுப்புக் கொடி காட்டியவர்களிடம் என்ன காரணம் என அமைச்சர் காரை நிறுத்தி கேட்டிருக்கிறார்.

பின்னர் அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்.பி., சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் வீட்டுக் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை, சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து  தகவல் அறிந்த போலீசார், ரகளையில் ஈடுபட்டவர்களை அங்கு சென்று அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டிய எம்.பி., ஆரதவாளர்கள், பிடித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை அறிந்த அமைச்சர் ஆதரவாளர்கள், எம்.பி. சிவா, ஆதரவாளர்களைத் தாக்கினர்.  அதனை தடுக்க முயன்ற பெண் போலீஸ் சாந்தி என்பவரும் காயமடைந்தார்.  இச்சம்பவம் தொடர்பாக, எம்.பி., தரப்பில் சூர்யா குமாரும், அமைச்சர் தரப்பில் 54வது வட்டச் செயலாளர் மூவேந்தரும் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இரண்டாம் நிலை காவலர் சாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் புகுந்து ரகளை செய்து, பெண் போலீசாரைக் காயப்படுத்தியதாக திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது  8  பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய், ராமதாஸ் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேன் துரைராஜ், 54வது வார்டு பகுதி செயலாளர் திருப்பதி ஆகியோரில் பகுதி செயலாளர் திருப்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

துரைமுருகன்

திருச்சியில் தி.மு.க., எம்.பி., ஆதரவாளர்களும், திமுக அமைச்சரின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஐவரையும் கட்சியை விட்டு நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

ஆனால் உள்ளூர் திமுககாரர்கள் வேறு விதமாக பேசிக் கொள்கிறார்கள், காஜாமலை விஜய் திருமணத்தையே நடத்தி வைத்தவர் கருணாநிதி. அதே போல பல ஆண்டுகளாக நேருவின் நேர்முக உதவியாளராகவே செயல் பட்டவர் முத்துச்செல்வம். இவர் தேர்தல் நேரத்தில் இன்றைய முதல்வர் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையானதோடு வைரலும் ஆனது. இருந்தாலும் அரவணைத்துக் கொண்டார். மாமன்ற உறுப்பினராகவும் ஆக்கி அழகு பார்த்தார் நேரு. ஆனால் சமீப காலமாக எதிர்கட்சியினரை விட நேருவின் மனசாட்சியாக இருக்கும் மேயர் அன்பழகனை மாமன்றத்தில் சீண்டுவதை வழக்கமாகக் கொண்டதால் நேரு தன்னுடைய சாணக்கியத்தனத்தை பயன்படுத்தி விட்டார் என்கிறார்கள். அதே நேரத்தில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என கண்ணை சிமிட்டி சத்தமில்லாமல் கொண்டாடி வருகின்றனர் எதிர் தரப்பினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web