வட போச்சே!! காதலிக்கு பரிசளிக்க பல்சரில் சென்று ஆடு திருடிய இளைஞர்கள்!!
நாளை பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினம். காதலர் தினத்தை கொண்டாட உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தயாராகி வருகின்றனர். தங்கள் காதலி, காதலனை கவர்ந்திளுக்க கூடிய பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுப்பர். இப்படி தன் காதலிக்கு பரிசு வாங்க கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் சிக்கிக்கொண்டார். இப்போது காதலர் தினத்தையே சிறையில் கொண்டாடும் நிலை வந்துவிட்டது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மலையரசன் குப்பம் கிராமத்தில் ரேணுகா என்பவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இவரது ஆட்டுப்பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இளைஞர்கள் இரண்டுபேர் ஆடு ஒன்றினை தூக்கி கொண்டு பைக்கில் சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் கல்லூரி மாணவன் அரவிந்த் குமார் (20), அவனது நண்பன் மோகன் (20) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கிராம மக்கள் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, காதலிக்கு பரிசு வாங்கிக் கொடுக்க கல்லூரி மாணவர் அரவிந்திடம் பணம் இல்லை. இதனால் காதலியை மயக்கி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஆட்டினை திருடியதாக தெரிவித்துள்ளார்.இதனையடுத்து இரு இளைஞர்களை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க