விநோதம்... கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் நிகழ்ச்சி!

 
துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும்  நிகழ்ச்சி


 
ஆண்டிபட்டி அருகேயுள்ள மறவப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  மறவப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் பக்தா்கள் முளைப்பாரி, அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தியும், பொங்கலிட்டும் அம்மனை வழிபட்டனா்.
திருவிழாவின் 2ம் நாளான புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் மஞ்சள் நீருற்றி, சகதியில் தோய்த்த துடைப்பத்தால் ஒருவரையொருவா் மாறி மாறி அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. மறவபட்டியைச் சோ்ந்த ஆண்கள் சேத்தாண்டி வேஷமிட்டும், பெண் வேஷம், கருப்பசாமி வேஷமிட்டும் சகதியில் தோய்த்த துடைப்பத்தால் தங்களுக்குள் மாறி மாறி அடித்து விளையாடினா். 
முத்துலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரியமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியால் மாமன், மைத்துனா்களிடையே உறவு வலுப்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பிரிந்த உறவுகள் ஒன்று சேரும் என்பது தங்களது நம்பிக்கை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web